tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு...  5,043 பேர் குணமடைந்துள்ளனர்...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (சனி) புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,808 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5,043 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவை வென்று வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,618 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சிகிச்சையில் 53,481 பேர் உள்ளனர். சென்னையில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்குள் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் 17 பேர் வெளிப்பகுதியில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

;