tamilnadu

img

கொரோனா: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிபிஎம் 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி

கள்ளக்குறிச்சி, மே 26- கொரோனா ஊரடங்கு சூழலில் சமூ கத்தின் அடித்தட்டு மக்களை பாதுகாத்திட  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சி யாக பல்வேறு நிவாரணப் பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னலமற்று மேற்கொண்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விவசாயம், அமைப்புசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள ஆறு வட்டங்களில் கல்வராயன்மலை வட்டம் தவிர மீதி 5 வட்டங்களில் கட்சியின் சார்பில் தொடர்ந்து அடித்தட்டு மக்களுக்கான நிவா ரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆங்காங்கே கிராமப்புற பகுதி களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகள், தனிப்பெண்கள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற முதியோர், ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல தரப்பினரும் குறைந்தபட்ச நிவார ணம் பெற முடிந்துள்ளது. இப்படி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை நகரம்,  உளுந்தூர்பேட்டை ஒன்றியம், திருநாவ லூர் கிழக்கு, திருநாவலூர் மேற்கு, திருக்  கோவிலூர் உள்ளிட்ட சுமார் 50க்கும்  மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக் கான உழைப்பாளி மக்களின் குடும்பத்தி னருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்  களும், முககவசமும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சமூக இடைவெளி யுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு உட்பட்டு நடைபெற்றன. அரசு ஊழியர்கள், ஆரம்பப்பள்ளி, பட்ட தாரி ஆசிரியர்கள், காப்பீட்டுக் கழக ஊழி யர்கள், மருத்துவர்கள், மின்சாரம், போக்கு வரத்து, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உதவியுடனும், ஓய்வுபெற்ற அரசு மருத்து வர் கள்ளக்குறிச்சி உதயகுமார் உள்ளிட்ட சில தனிநபர்களின் உதவியுடனும் நிவார ணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தொழிற்  சாலைகள்  ஏதுமற்ற விவசாயக் கூலித் தொழி லாளர்களை அதிகமாக கொண்ட மாவட்ட மாக இருந்தாலும் பல்வேறு அமைப்புகளின் உதவிகளை எல்லாம் கணக்கிட்டால் சிறிய  மாவட்டமான இங்கு சுமார் 10 லட்சம் ரூபாய்  மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங் கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.