சென்னை: 5 பெண்கள் உயிரிழப்பு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றோடு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்களும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு பெண் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு: 7 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிறன்று (மே17) 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 477 பேர் பாதிக்கப்பட்டு, 76 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர்.