tamilnadu

img

தொடரும் வன்கொடுமை தாக்குதல்கள்..... பட்டியல் - பழங்குடியின மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முழுமுயற்சி எடுத்திடுக.... முதலமைச்சருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம்.....

சென்னை:
தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பட்டியல்- பழங்குடியின மக்களின் ஜனநாயக  உரிமைகளைப் பாதுகாத்திட முழுமுயற்சி எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தீண்டாமை ஒழிப்புமுன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப்பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான பட்டியலின மற்றும்பழங்குடியினர் விழிப்பு மற்றும்கண்காணிப்புக்குழுக் கூட்டத்தை ஜூலையில் நடத்திட வலியுறுத்தி முதலமைச்சருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் பின்வரும் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பட்டியலின மக்கள் மீது தொடர்ச்சியாக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. அதிகரித்தும் வருகிறது. உதாரணமாக மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரையானநான்கு மாத (ஊரடங்கு காலம்) காலத்தில் கொலைகள் 17,  மலக்குழிமரணம் – 4, பாலியல் வல்லுறவு – 5, சாதி ஆணவப் படுகொலைகள் – 3, சாதி மறுப்பு திருமணம் செய்தவர் கள் மீதான தாக்குதல் – 5, தலித்ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை – 7, அம்பேத்கர் சிலைக்குஅவமதிப்பு – 2, கல்விநிலையங் களில் சாதியப் பாகுபாடு – 1, மயானம், மயானப் பாதை பிரச்சனை– 2,  அரசுப் பணியாளர்களால் பாரபட்சம் – 3, கொத்தடிமை – 1, தாக்குதல்கள் – 50 ஆகும்.

இப்பொழுதும் வன்கொடுமை கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அவற்றுள் சில, 2021ல்சட்ட மன்றத் தேர்தல் முடிந்தவுடன்,

$   அரக்கோணம் சோகனூரில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

$    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் செங்கல் சூளைஒன்றில் மர்மமான முறையில் சீனிவாசன் என்கிற பட்டியலினத்தவர் கொலை செய்யப்பட்டார்.

$   சேலம் மாவட்டத்தில் செந்தில் என்கிற தலித், கவுதம் என்கிற சாதி இந்துவால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

$    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்து மனோ என்கிற கைதி சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

$    திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கல்லரைப்பாடி தனி ஊராட்சித் தலைவர் ஏழுமலையை செயல்பட விடாமல் தடைசெய்கிறார்கள். 

$    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஒட்ட நந்தல் கிராமத்தில் பட்டியலின முதியவர்களைக் காலில் விழ வைத்து அவமானப்படுத்தியது.

$    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி அரசுமேல்நிலைப்பள்ளியில் ஒரத்தூர்கிராம பட்டியலின மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளனர். 

$   சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், தபசுகுடி மயானத்தில் தலித்துகள் புதைக்கும் பகுதியில் ஊராட்சியால் அமைக்கப்பட்ட சுற்று வேலியை அகற்றியது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக் கிற பின்னணியில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு பட்டியலின மற்றும் பழங்குடி யின மக்களின் ஜனநாயக உரிமை களைப் பாதுகாத்திட முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 2015 விதி 16இன் படி மாநில முதல்வர் தலைமையிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு தடவை ஜனவரி மாதமும் ஜூலை மாதமும் கூட்ட வேண்டும். அதன்படி 2021 ஜூலை மாதம் இக்கூட்டத்தை தமிழக முதல்வர்  கூட்ட வேண்டும். 

இந்திய அரசியல் சாசன சட்டக் கூறு 338 இன் படி தமிழகத்தில் மாநில அளவிலான பட்டியல் சாதியினருக்கான ஆணையம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.ஆந்திராவில் உள்ளது போல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்ட அமலாக்கத் துக்கு என மாநில சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும்.வன்கொடுமை தடுப்புச் சட்ட விதி 8இன் படி ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி அன்றோ அதற்கு முன்னரோ தனது அறிக்கையை மாநில முதல்வருக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர், டிஜிபியை பணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;