tamilnadu

img

நடத்தை விதிகளைத் தொடர்ந்து மீறும் அண்ணாமலை மீது நடவடிக்கை

சென்னை, ஏப்.15- கோவை மக்களவைத் தொகுதி பாஜக  வேட்பாளர் அண்ணாமலை மீதான விதி மீறல் புகார் குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்  துள்ளார்.

 தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் வாகனப் பிரச்சாரம், மைக்  பிரச்சாரம் என எந்த வகையிலும் வாக்கா ளர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், கோவை தொகுதிக்கு உட்பட்ட  காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து 4-வது நாளாக தேர்தல் விதியை மீறியும், அனுமதி  பெறாமலும் நூதன முறையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவ ரைத் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அண்ணாமலை வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில்  தொண்டர்களுடன் சாலையில் நடக்க தொடங்கினார். அண்ணாமலையின் இத்த கைய செயலால் வாகன ஓட்டிகள் கடும் அவ திக்கு உள்ளாகினர். இதையடுத்து, அண்ணாமலை உட்பட  300 பேர் மீது, தேர்தல் பறக்கும் படையினர்  கொடுத்த புகாரின் பேரில் கோவை சூலூர்  காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  

இதுகுறித்து தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகுவிடம் செய்தியா ளர்கள் திங்களன்று கேள்வி எழுப்பிய போது, “அண்ணாமலை மீது விதிமீறல் புகார் குறித்து காவல் துறையினர் உரிய  நடவடிக்கை எடுப்பார்கள்” என்று உறுதி யளித்தார். “இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

இறுதிநாள் பிரச்சாரத்திற்கு கூடுதலாக 1 மணிநேரம் அனுமதி

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாகு, “தேர்தல்  நடைபெறும் ஏப்ரல் 19 அன்று விடுமுறை  அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலா ளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில் முன்கூட்டியே தகவல் தெரிந்தால் தேர்தல் ஆணையத்தின் 1950  என்ற எண்ணுக்கு தொழிலாளர்கள் - ஊழி யர்கள் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 17 அன்று மாலை 5  மணியுடன் பிரச்சாரம் ஒய்கிறது. இந்நிலை யில் கோடைக்காலம் என்பதால் கூடுத லாக ஒரு மணி நேரம் 6 மணி வரை பிரச்சா ரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ள தாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

ஆன் லைனில் பூத் சிலிப் 

பூத் சிலிப் 92.80 விழுக்காடு வழங்கப் பட்டு விட்ட நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதி  மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி  நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காத வர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். பூத் சிலிப் இல்லை என்றா லும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்  தால் வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாகு குறிப்பிட்டார்.