tamilnadu

கொரோனா தொற்றைத் தடுக்க தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்க வேண்டும்

ஆட்சியர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜூன் 2- தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஆலை நிர்வாகம்,  தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்த வேண்டும். இதற்கு  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் - செங்கல்பட்டு மாவட்டக்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர்  ஜான் லூயிஸ், காஞ்சிபுரம் ஆட்சியர் பா. பொன்னையா ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வா.பிரமிளா ஆகியோர் அளித்த மனுவின் சுருக்கம் வருமாறு:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் உள்நாட்டு, பன்னாட்டுத் தொழிற்சாலை களும், சிறு, குறு தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. கடந்த 70 நாட்களாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில்  தொழிற்சாலைகளில் தகுந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழிற்சாலை நிர்வாகங்களும், தொழி லாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய பாது காப்பு ஆலோசனைகளை அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்ப ஆலை நிர்வாகம், தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும், தூய்மை பணி யாளர்களுக்கு போதுமான அளவு கையுறை,  முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை களையும், பணிசெய்திடத் தேவையான உபகரணங்களையும் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள பொதுநல  அமைப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்களின்  பிரதிநிதிகளை  ஈடுபடுத்தி உள்ளூர் அளவில்  நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்  கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர்த் தொட்டி, குழாய்களை கிருமிநாசினி பயன்ப டுத்திப் பராமரிக்க நடவடிக்கை வேண்டும், மேலும் கழிவு நீர் கால்வாய்களில் கிருமி நாசினி தெளித்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.