டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக உள்ள வணிக நிறுவனங்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்படுகிறது. நகர் நல அலுவலர் மருத்துவர் முத்து தலைமையிலான குழு காஞ்சிபுரம் நகரத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்தது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் ஒரு காயலான் கடையிலும், சங்கம் தியேட்டர் அருகில் ஒரு காயலான் கடையிலும் டெங்கு வளர்வதற்கான கொசு புழுக்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த இரண்டு கடைகளுக்கும் ரூ.2.25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.