tamilnadu

img

மதுராந்தகம் வருவாய் கோட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைத்திடுக

செங்கல்பட்டு, ஆக.20-  மதுராந்தகம் வருவாய் கோட்டத்தை புதியதாக அமைய விருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி யுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை 2 -ஆக பிரித்து செங்கல்பட்டைத் தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் செவ்வாயன்று (ஆக. 20) நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களிலும் கூடுதல் தலைமைச் செயலாளர் சத்தியகோபால் கலந்து கொண்டு, அரசியல் கட்சிகள், பொது நலச் சங்கங்கள், பொது மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மக்கள் நல்லுறவு மைய கட்டிடத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் காஞ்சிபுரம் மதுராந்தகம் வருவாய் கோட்டங்களைச் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் பொதுநல சங்கங்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மதுராந்தகம் வருவாய் கோட்டத்தை புதியதாக அமைய விருக்கும் செங்கல்பட்டில் இணைக்க வேண்டும், அப்போதுதான் மாவட்டம் பிரிப்பதற்கான நோக்கம் நிறைவேறும். மிகப் பெரிய ஒன்றிய மான உத்திரமேரூரை இரண்டு ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும். அதேபோன்று உத்திரமேரூர் வட்டத்தை இரண்டாகப் பிரித்து வருவாய் கோட்டமாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள செய்யார், அரக்கோணம் வட்டம் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களைப் பெற்று காஞ்சிபுரத்துடன் இணைத்திட வேண்டும், நிர்வாகத்திற்காகக் குன்றத்தூரை மையமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கலைய ரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் செங்கல்பட்டில் வளர்ச்சிக்காக வேதாசலம் முதலியார் வழங்கிய 500 ஏக்கர் நிலம் அரசு அலுவலகங்கள் கட்டிய பின்னரும் மீதமுள்ள அந்த இடங்கள் மருத்துவக் கல்லூரிக்கு மிக அருகில் உள்ளன நகராட்சிக்கு ட்பட்ட அந்த பகுதியிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைக்க வேண்டும், இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளைச் செங்கல்பட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துக்களை அனைத்து கட்சி களும் முன்வைத்தனர். மேலும் மறைமலைநகரை மைய மாகக்கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கலந்து கொண்டு மாவட்டத்தைப் பிரிப்ப துடன் மிகப்பெரிய அளவில் உள்ள வருவாய் வட்டங்களையும், ஊராட்சிகளையும் பிரிக்க வேண்டும், அப்போதுதான் கிராம மக்களுக்கு அரசின் நலத்திட்ட ங்களையும் கொண்டு சேர்க்க முடியும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூடுதல் தலைமைச் செயலா ளர் சத்தியகோபால், ‘காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் மிக விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’ என்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட தனி அலு வலர் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.