சென்னை, ஆக. 20 - ஒன்றிய அரசுப் பணிகளில் ‘லேட் டரல் என்ட்ரி’ மூலம் ஆட்களை நிய மித்து எஸ்.சி.-எஸ்.டி., ஓ.பி.சி. மற் றும் பட்டியல் வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சி முறி யடிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், தமது சமூகவலைதள பக்கத் தில் ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
“சமூக நீதியை நிலைநாட்டவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாத்து அதை சரியான முறையில் நடை முறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்காணும் நடவடிக் கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.
லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்கு தலாகும்; தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங் களைச் சேர்ந்த அலுவலர்களுக் குரிய வாய்ப்புகளை உயர்மட்டத் தில் தட்டிப் பறிப்பதாகும்.
ஒன்றிய அரசு இதனைக் கை விட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய பணியிடங் களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படா மல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்த வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட - நம் சமூ கத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாய மான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்.”
இவ்வாறு முதல்வர் குறிப் பிட்டுள்ளார்.