tamilnadu

img

விஜயகாந்த் மறைவுக்கு சிதம்பரத்தில் இரங்கல் கூட்டம்

சிதம்பரம், டிச.31-  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே அனைத்து கட்சி இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  

இந்த கூட்டத்திற்கு தேமுதிக மாவட்டச் செயலாளர் உமாநாத் தலைமை  தாங்கினார்.  இதில் மாவட்ட அவைத் தலைவர் பாலு மாவட்ட துணைச் செயலாளர் பானுச்சந்தர்,  திமுக சார்பில் மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், அதிமுக சார்பில் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி தில்லைசேகர்,  காங்கிரஸ் நகர தலைவர் தில்லைமக்கின், ராதா, ராஜா சம்பத்குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர செயலாளர் ராஜா நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயசித்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி எம் சேகர், மதிமுக மாவட்ட செயலாளர்  குணசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரஜினிகாந்த், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், அமமுக மணிவண்ணன், ரஜினி ரசிகர் மன்ற சார்பில் பாஷா, விஜய் ரசிகர் மன்றம் சார்பில் அருண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.