tamilnadu

ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்

சென்னை,ஜூலை 27- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து திமுக சார்பில் ஜூலை 27 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மயிலை பாலு, பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உட்பட ஏராளமானோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சின்னமலை பகுதியில் நடந்த இந்த கண்டன சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக எம்பிக்கள், மற்றும் எம்எல்ஏக்கள், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

இதேபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி என அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில்  திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.