மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும்
சென்னை,அக்.29- ஆளுநரின் பொறுப்பற்ற அவ தூறு அரசியல் கண்டனத்திற்குரி யது என்றும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: கோவை, கார் வெடிப்பு சம்ப வத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக வின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய் ததுடன், 75 கிலோ வெடி மருந்து களையும் கைப்பற்றியது. இந்த வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்ற நோக்கில் இவ்வழக்கு என்.ஐ.ஏ விசார ணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் வித மாக வெளிப்படையான முயற்சி களை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காவல்துறை விசார ணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை தொடக்கத்திலி ருந்தே ஊடகங்களில் பேசி வந்தார். காவல்துறையின் உளவுப்பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக பேசி, குறு கிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், பந்த் போராட்டம் நடத்து வோம் என்றும் பாஜக அறிவித்தது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமி ழிசை சவுந்தரராஜன் பந்த் நடத்து வதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார். ஆனால், பாஜகவின் பந்த் அறி விப்பிற்கு பொதுமக்களிடையே கடு மையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் பந்த் அறிவிக்க வில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து அந்தர் பல்டி அடித்தது பாஜக. இப்போது, அடுத்தகட்ட சதி ராட்டமாக, ஆளுநர் ரவியை கள மிறக்கிவிட்டுள்ளார்கள். கோவை யில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங் கேற்ற அவர், காவல்துறையின் துரி தமான செயல்பாட்டை பாராட்டி விட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாம தப்படுத்தப்பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் கற்பனைச் சரடுகளை அள்ளி விட்டுள்ளார். மாநில அர சாங்கத்திற்கு உள்நோக்கம் கற் பிக்க முயற்சி செய்திருக்கிறார்.
அசம்பாவிதத்தை தடுக்கத் தவறியது என்.ஐ.ஏ.தான்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் ஏற்கனவே தேசிய புல னாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்கத் தவறியது என்.ஐ.ஏ தான். ஒரு வேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகார மும் அவர்களுக்கு உள்ளது. உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும். ஒரு வேளை ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக் கப்பட்டிருந்தால் அதில் ஒன்றிய அர சாங்கம் தான் குற்றவாளியாக இருக்க முடியும். இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களையும் உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் ஒன் றிய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அர சமைப்பு வடிவமைக்கப்பட்டுள் ளது. அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜக வின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜக வின் இதுபோன்ற நடவடிக்கை கள் கடுமையான கண்டனத்திற்குரி யவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படு வது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி யிலிருந்து நீக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வலி யுறுத்துகிறோம். கோவை மக்களின் பாதுகாப்பை யும், சமூக அமைதியையும் நிலை நாட்டுவதே தற்போதைய தலை யாயக் கடமையாகும். தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித் திட வேண்டும். கார் வெடிப்பு வழக் கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.