இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யாவின் 103வது பிறந்த நாளான திங்களன்று (ஜூலை 15) பல்லாவரம் பகுதியில் செங்கொடியேற்றம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், எஸ்.குமார், ச.லெனின், ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமு, ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.