சென்னை, ஆக. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயற் குழு உறுப்பினர் தோழர் எஸ். ஜனார்த்தனன் சனிக்கிழமை யன்று (ஆக.8) காலமானார். அவருக்கு வயது 77. ஸ்டாண்டர்ட் மோட் டார்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து முன்னணி தொழிற்சங்க ஊழியராக மாறிய ஜனார்த்தனன் 1970களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந் தார். 1983, 1988களில் நடை பெற்ற தொழிற்சங்கத் தேர்த லில் எஸ்.ஜனார்த்தனன் பொதுச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற ஆட்குறைப்பை எதிர்த்து ஜனார்த்தனன் தலைமையில் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வேலை இழப்பு இன்றி, சுழற்சி முறை யில் வேலை வழங்க ஒரு ஒப் பந்தத்தை உருவாக்கினார். அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. 1982ம் ஆண்டு கட்சியின் கிண்டி-தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினராகவும், பின்னர் செயலாளராகவும், ஒன்று பட்ட சென்னை மாவட்டக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994ம் ஆண்டு முழு நேர ஊழியரான ஜனார்த்தனன், தென்சென்னை மாவட்டக் குழு அலுவலக செயலாளர், மாவட்டச் செயற்குழு உறுப் பினராகவும் செயலாற்றி னார். முதுமையின் காரண மாக 2006ம் ஆண்டு பொறுப்பு களில் இருந்து விலகினார். இருப்பினும், சென்னை விமான நிலைய விரிவாக் கத்திற்கு எதிராக கட்சி நடத்திய ஒன்றைரை வருட தொடர் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். அவருக்கு நிர்மலா என்ற மனைவியும், நவீன் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.