கடலூரில் தோழர் ஆர்.ராஜமாணிக்கம் 80வது பிறந்தநாள் விழா
சிதம்பரம், ஜூன் 15- கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் ஆர்.ராஜமாணிக்கத்தின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தை சேர்ந்த ஆர்.ராஜமாணிக்கம் இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தார். 1975 ஆம் ஆண்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஒருங்கி ணைந்த வட்டக் குழுவிற்கு தற்போது கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக உள்ள கே.பாலகிருஷ்ணன் வட்ட செயலாளராக இருந்தபோது வட்டக்குழு உறுப்பினராக சிறப்பாக பணி யாற்றியுள்ளார். தொடர்ந்து இவர் சிஐடியு சலவை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 80ஆவது பிறந்தநாளான ஞாயிறன்று கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, ஒன்றிய குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட வர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவ ருக்கும், துணைவியார் ராஜகுமாரிக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவரான செம்மலர் ஒன்றிக்குழு உறுப்பினர் மற்றும் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளராக உள்ளார். இவரது குடும்பம் கட்சியோடு இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.