தீக்கதிர் நாளிதழின் பத்திரிக்கையாளரும் சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழருமான அறம் வளர்த்த நாதன் காலமானார்.
தோழர் அறம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் அறம் வளர்த்த நாதன் திங்களன்று காலை 10 மணி அளவில் காலமானார் அவருக்கு வயது 91 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள காந்திஜி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் சுதந்திரப் போராட்டத்தின் போது கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த தோழர் ஏ நல்ல சிவன் வழிகாட்டுதலின்படி பல்வேறு மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர நாளேடான தீக்கதிர் நாளிதழில் ஆங்கில பத்திரிகையில் வரும் சிறப்பான கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அறம் என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வந்தார் பல சமயங்களில் எழுத்தாளர் சங்க மேடைகளில் ஒரு தொழிற்சங்க தலைவனை போல இலக்கியவாதியை போல சிறப்பாக பேசி மக்களை கவரக்கூடிய தலைவராக விளங்கியவர் அறம் வளர்த்த நாதன் தீக்கதிர் நாளிதழில் குடும்பத்தில் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள கணேஷ் நகரில் உள்ள அவரது மகள் வீட்டின் அருகில் குடியிருந்து வந்தார் அவர் வாசிப்பதற்கு என்று தீக்கதிர் நாளிதழ் தினசரி போடப்படும் நாளிதழின் அனைத்து பக்கங்களையும் படித்து விடுவார் தீபாவளி அன்று அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து காலை 10 மணி அளவில் காலமானார் தோழர் அறம் வளர்த்த நாதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் தோழர் ஆர் எஸ் மணியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது
காலை 11 மணியளவில் திண்டுக்கல் மின் மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது