tamilnadu

img

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது புகார்...

சென்னை:
‘நாடோடிகள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மலேசியாவைசேர்ந்த நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மே 28 வெள்ளியன்றுபுகார் அளித்தார். அந்த புகாரில்,   “முன்னாள் அமைச்சரான மணிகண்டன், ஒரே வீட்டில் என்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி,  பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். தற்போதுதிருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினால், திருமணம் செய்யாமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்துகிறார். அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்”  என்று தெரிவித்துள்ளார்.

;