tamilnadu

img

 தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொதுமேலாளருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி

விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தீக்கதிர் நாளிதழின் முன்னாள்  பொதுமேலாளருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 6 வியாழனன்று மதுரை  தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.  தோழர் அப்துல் வஹாப் உருவப்படத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் திறந்துவைத்தார்.  இதில் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன் உரையாற்றினார். தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர்  கே.கனகராஜ், தீக்கதிர் வெளியீட்டாளர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், முன்னாள் பொதுமேலாளர் எஸ்.ஏ.பெருமாள்,  கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் ஆகியோர் பங்கேற்றனர்.

;