இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஓர வஞ்சனை செய்யும் மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதிக்கட்ட தேர்வு எழுதுவதற்கு வங்கி நிர்வாகம் கட் ஆப்மதிப்பெண்கள் தீர்மானித்து தேர்வு எழுதியவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நடைபெறவுள்ள அகில இந்திய போட்டித் தேர்வில் தமிழகத்தில் இதரபிற்பட்ட வகுப்பினருக்கு 61.75, பட்டியலினத்தவருக்கு 61.25, பழங்குடியினத்தவருக்கு 53.75 கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்துள்ள எஸ்பிஐ வங்கி நிர்வாகம்இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 28.5 கட் ஆப் மதிபெண் தீர்மானித்துள்ளது கடைந்தெடுத்த அநீதியாகும். அதாவது இதரபிற்படுத்தப்பட்டவர் (ஓபிசி), பட்டியலினத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினவர்களை (எஸ்டி) விட அதிகமான கட் ஆப் மதிப்பெண்களையே இவர்களுக்குதீர்மானித்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்பிரிவினருக்கு குறைவான மதிப்பெண்கள் தீர்மானித்திருப்பது இவர்களுக்கு அதிக வாய்ப்பளிப்பதற்கானஉள்நோக்கம் கொண்டதாகும்.
பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு கோட்பாட்டினை அமலாக்குவதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தகுதிஅடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களை பொதுப்பிரிவில் இடமளிக்க வேண்டும். ஆனால், இவர்களை எஸ்சி எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு பட்டியலில் இடமளிப்பதால் இவ்வகுப்பைச் சார்ந்த பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதுஎஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பை சார்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியில் சேருகிற வாய்ப்பை தட்டிப்பறிப்பதாகும்.
மேலும், எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பினர்களுக்கு கட் ஆப் மார்க் தீர்மானித்து போதுமான எண்ணிக்கையில் பயனாளிகள் கிடைக்காத நிலையில், அந்த இடங்களில் இவ்வகுப்பினரையே சேர்க்கும் வகையில் கட் ஆப்மார்க்கை குறைக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தியும் மத்திய அரசு அதைநிறைவேற்றுவதில்லை. மாறாக, அந்த காலியிடங்களை பொதுப்பிரிவினரைக் கொண்டு நிரப்பும் மோசமான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே, இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான கட் ஆப் மார்க்கை குறைத்து தீர்மானித்துள்ளது. வங்கி நிர்வாகத்தின்இந்த போக்கை வன்மையாக கண்டிப்பதோடு, இத்தகைய பாரபட்ச போக்கினை களைந்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாநிலசெயற்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
மத்திய அரசு நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் தேர்வாகும் பயனாளிகளை பொதுப்பிரிவில் பணியமர்த்தவும்,எஸ்சி/ எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு முழுமையாக இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணிகளை (backlog) எஸ்சி/எஸ்டி, ஓபிசிபிரிவினருக்கு காலியாக உள்ள பணிகளை இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். மேலும் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தீர்மானிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் என்ற வருமான வரம்பை குறைக்காமல் இந்தஇடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுவனங்களில் அமலாக்குவதால் உண்மையான ஏழைகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்பதையும்சுட்டிக்காட்டுவதோடு, ஆண்டு வருமான வரம்பை குறைக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக்
கொள்கிறோம்.