tamilnadu

img

ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆணையம்

“தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. “ஆனால் இந்த அமைப்பைத் தம்முடைய கைப்பாவையாக ஆக்கிக் கொள்வதற்காக மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.