tamilnadu

img

பள்ளிகளில் விலையில்லா புத்தகப்  பை வழங்கும் பணி தொடக்கம்

சென்னை:
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நிலையில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புத்தகங்களை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்துப் புத்தகங்கள், புத்தகப் பைகளை வாங்கிச் சென்றனர்.

;