சென்னை:
வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் தற்போது 9-வது கட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 1ஆம் தேதி முதல் வருகிற 31ஆம் தேதி வரை அமல்படுத்தப் பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்ட நிலையிலும், திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் வருகிற 15 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, கடந்த 6 ஆம் தேதி வழிகாட்டு நெறிமுறைக ளையும் வெளியிட்டது. அதில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். தியேட்டருக்கு உள்ளே நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், பொதுவான பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.
நுழைவுவாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை கண்காணிக்கப் பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் அரங்குகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏ.சி. 24 முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.எனினும், தமிழக அரசு சார்பில் தியேட் டர்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப் படவில்லை.முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இருப்பினும், தமிழகத்திலும் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.ஊரடங்கு உத்தரவால் 6 மாத காலத்திற் கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.