சென்னை,செப்.23 சென்னை தி.நகரில் உள்ள சிறீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்க ப்பட்டிருக்கிற சாரா என்ற ரோபோ திங்களன்று (செப்.23) அறிமுகம் செய்யப்பட்டது. மனித ஆள் வடிவிலான மற்றும் மனித தோற்றம் கொண்ட சாரா ரோபோவை இக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெஸ்கெரா நிறுவனத்தின் இயக்குனர் அசீம் தம்போலி மற்றும் ஃபியூச்சர்நெட் டெக்னால ஜிஸ் - ன் நிர்வாக இயக்குனர் எல். அசோக் ஆகியோர் முன்னிலையில் பிரபல தொலைக்காட்சி ஆளுமைகளான கோபி நாத் சந்திரன், ஈரோடு மகேஷ் ஆகியோர் அறிமுகம் செய்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர். எஸ். பத்மாவதி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். ‘டு-இட் யுவர்செல்ஃப் அகாடமி என்பதன் ஒத்துழைப்போடு இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் மாணவர்க ளால் இத்தகைய ரோபோ உருவாக்கப்பட்டி ருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறடி உயரமும், 29.2 கிலோ எடையும் கொண்ட சாரா ரோபோ, யுஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப த்தால் இயக்கப்படுகிறது. இந்த ரோபோ உருவாக்கப் பணியில் எஸ்.நிவேதினி, ஆர். மதுமிதா, ஏ. குஷி, எஸ்.விதிகா, ஆர். ஹேமப்பிரியா மற்றும் எம்.பாவனா கனூகா ஆகிய மாணவி கள்இடம்பெற்றிருந்தனர்.