மே 12 மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு
திருவண்ணாமலை,மே 7- திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரம், அண்ணாமலையார் கோயில் 2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மே12 திங்களன்று திருவண்ணாமலை நகர பகுதிக்கு அருகாமையில் காமராஜர் சிலை அருகில்,மணலூர்பேட்டை சாலை, வேங்கிக்கால் புறவழிச்சாலை பைபாஸ், சமுத்திரம் மற்றும் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கிவரும் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களான ஹோட்டல் நளா, ஹோட்டல் அஷ்ரேய்யா, ஹோட்டல் அம்மாயி (எ) அருணாச்சலா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்காடி, வேங்கிக்கால் எப்எல் உரிமம் பெற்ற மதுபான கடைகள், மதுக்கூடங்களுக்கு மே12 அன்று மூடிவைக்க மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.