tamilnadu

‘களஞ்சியம் செயலி’ மூலம் பண்டிகை முன்பணமா? உத்தரவைத் திரும்பப் பெற அரசு ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, செப். 30 - பண்டிகை முன்பணத்திற்கு ‘களஞ்சியம்’ செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற  சுற்றறிக்கையை ரத்து செய்து, பழைய முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

இதுதொடர்பாக, தமிழ்நாடு அர சின் முதன்மை நிதித்துறை செயலாள ருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொ) சா. டானியல் ஜெயசிங், பொதுச்செய லாளர் ஆ. செல்வம் ஆகியோர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

களஞ்சியம் செயலி கட்டாயமா?

கருவூல ஆணையர் நடத்திய காணொளி கூட்டத்தின் அடிப்படை யில் அரசு ஊழியர்கள் இனிமேல் ‘களஞ்சியம்’ என்ற செயலி மூலம் தான் தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என கருவூலத்துறை ஆணையர் மூலம் மாநில முழுவதும் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான சுற்றறிக்கையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிக வும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக் கின்றனர். ஏனென்றால் தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு மாத காலம்  இருக்கக்கூடிய நிலையில் ‘களஞ்சி யம்’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்  என்ற உத்தரவை, சாத்தியம் இல்லாத அவசரகதியில் உடன் அமல்படுத்த முடியாத உத்தரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.

தொழில்நுட்பக் குறைபாடு

பொதுவாக தமிழ்நாட்டில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு  ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டி ருக்கின்றனர். குறிப்பாக அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை பணிபுரிகின்றனர். ஆனால் அத்தனை பேரும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பார்களா, அப்படியே வைத்திருந்தாலும் எல்லோரும் ‘களஞ்சியம்’ செயலியை பயன்படுத்த தெரிந்த வர்களாக இருப்பார்களா, என்றால் கேள்விக்குறியாக உள்ளது. அது மட்டுமல்ல. பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளால் செய லிழந்த செயலியாக ‘களஞ்சியம்’ செயலி இருக்கிறது.

உத்தரவை திரும்பப் பெறுக!

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கருவூலத்துறையில் அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய பயிற்சி இல்லை. அதனை உடன் ஏற்படுத்திட வேண்டும். அது  மட்டுமல்லாமல், கருவூலத்துறை யில் 1500-க்கும் மேற்பட்ட இள நிலை உதவியாளர் பணி காலி யிடங்கள் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் 78-க்கும் மேற்பட்ட புதிய தாலுகாக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், அங்கு சார்நிலைக் கருவூலம் புதிதாக உரு வாக்கவில்லை. அதனால் கரு வூலத்துறை ஊழியர்கள் மிகப் பெரிய பணிச்சுமையோடு பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

களஞ்சியம் செயலியை முழுமை யாக அனைவராலும் பயன்படுத்த தெரியாத நிலையில் உடனடி உத்தர வால் பலன் ஏதும் ஏற்படாது.

எனவே, பண்டிகை முன்பணத்திற்கு களஞ்சியம் செயலி மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தாமல் ஊழியர் நலன் கருதி தற்போதைய ஆணையாளரின் உத்தரவை ரத்து செய்து பழைய முறையில் அனு மதித்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க உரிமைக்காக செப்டம்பர் 9 முதல் போராட்டம் நடத்தி வரும், ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அக்டோபர் 1 அன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், சிஐடியு அறைகூவலின் அடிப்படையிலும், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அக்டோபர் 1 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொ) சா. டானியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்; தொழிற்சங்கத்தை உடனே பதிவு செய்ய வேண்டும். பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.