tamilnadu

img

அண்ணனூர் வழியாக கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்து சேவை துவக்கம்

அண்ணனூர் வழியாக கோயம்பேட்டிற்கு  மாநகரப் பேருந்து சேவை துவக்கம்

அம்பத்தூர், மே 6- அம்பத்தூர் அருகே உள்ள அண்ணனூர் வழியாக முதல் முறையாக புதிய வழித்தடத்தில் மாநகரப் பேருந்து சேவையை அமைச்சர் சா.மு.நாசர் கொடிய சைத்து  தொடங்கி வைத்தார். இதில் ஆவடி மேயர் கு.உதயகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, மண்டலக் குழு தலைவர் அமுதாசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணனூர் பகுதியில் ஸ்ரீ சக்தி நகர், சிவசக்தி நகர், தேவி நகர், ரவீந்திரன் நகர், சோழன் நகர், ஜோதி நகர், ரயில்வே குடி யிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல  திருமுல்லைவாயல் பிரதான சாலைக்கு வந்து அங்கிருந்து மாநகரப் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். இதையடுத்து பொதுமக்கள் அண்ண னூர் வழியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர் மாநகரப் போக்குவரத்து அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று, அண்ணனூர் வழியாக கோயம்பேட்டிற்கு புதிய வழித்தடத்தில் மாநகரப் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆவடியில் இருந்து முருகப்பா பல் தொழில்நுட்ப பயிலகம், ஜெ.பி.நகர் சந்திப்பு, சிவசக்தி நகர், அண்ணனூர் ரயில் நிலையம், ஸ்ரீ சக்தி நகர், அயப்பாக்கம், வானகரம், மதுர வாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை புதிய வழித்தடத்தில் (73 ஏ) மாநகரப் பேருந்து சேவையை தொடங்கப்பட்டுள்ளது.