தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க உரிமைக்காக 20 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 1 அன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட சிஐடியு அறைகூவல் விடுத்திருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
சென்னை பிராட்வே மில் அருகில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், டி.கே. ரங்கராஜன் தலைமையில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.