விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பாசனதாரர்க ளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடை பெற்றது. பொதுப்பணித்துறை ஏரிகளில் குடிமராமத்து திட்டப் பணியானது அந்தந்த ஏரிகளின் பாசனதாரர்களை கொண்டு சங்கம் அமைத்து திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காடு பாசனதாரர் களின் பங்களிப்போடு பாசனதாரர்களாலேயே செயல்படுத்தப் படும் ஒரு உன்னதமான திட்டமாகும். இந்த திட்டத்தில் வருவாய்த் துறையினருடன் இணைந்து ஏரியின் எல்லைகளை கண்டறிந்து எல்லைக் கற்களை பதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மதகுகளை கட்டுதல், கலிங்கல் சீரமைத்தல், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், அணைக்கட்டுகளை பழுதுபார்த்தல், ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், ஏரியின் கரைகளிலும், நீர்பிடிப்பு பகுதிகளிலும் உள்ள செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 73 நீர்நிலை களில் ரூ.26 கோடியே 42 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டம் விழுப்புரம் மூலமாக 50 நீர்நிலைகளில் ரூ.13 கோடியே 65 லட்சத்தி லும், வெள்ளாறு வடிநில உபகோட்டம் கள்ளக்குறிச்சி சார்பில் 23 நீர்நிலைகளில் ரூ.12 கோடியே 77 லட்சத்திலும் குடிமரா மத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்ட த்தில் 6,974.95 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி மேம்படுத்தப்படும். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் விவசாயிகள், பாசனதாரர்கள் பங்களிப்போடு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டால் நீர்வரத்து மிகவும் மேம்பாடு அடையும். விவசாயம் அதிகம் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணி கள் நடைபெறுவதில் உள்ள குறைகளை பொதுப்பணித்துறை செயற் பொறியா ளர்களை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள லாம். மேலும் குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனக் கூறினார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் செயற் பொறியாளர்கள் ஜவஹர், மணிமோகன், உதவி செயற் பொறியாளர்கள் சுமதி, முருகவேல், கார்த்திகேயன், அன்பரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.