கடந்த அரை நூற்றாண்டு களுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக சினிமா இருந்து வருகிறது. அதன் தாக்கம் சமூகத்திலும் எதிரொலித்தது.
தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, என்.எஸ். கிருஷ்ணன் என பல பிரபலங்களுடன் பயணித்த அனுபவம் இந்த நூலை படிக்கும் போது நமக்கு ஏற்படுகிறது.
சினிமாவில் மகாகவி பாரதி எழுதிய “வாழ்க நிரந்தரம் வாழ்கதமிழ்மொழி” என்ற பாடல் “மேனகா” படத்தில் தான் அறிமுகம் ஆகி உள்ளது.
1970 ஆம் ஆண்டு எம்ஜிஆரிடம் கேள்வி கேட்டபோது ஒருமொழியை கட்டாயப்படுத்தினால் குழப்பம் நேரிடும் என்கிறார்கள். தமிழரின் நிலையும் அப்படித் தானே என்று கேட்கின்றனர். எம்ஜிஆர் பதில் அளித்தார்.
பெற்ற தாயை அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று சொல்வது கட்டாயப்படுத்துவது அல்ல.
தன்னை பெறாது ஆதிக்கம் செலுத்தி அழிக்க நினைக்கும் யாரோ ஒருத்தியை இவர் தான் உன் அம்மா என்று கூறி, அம்மா என்று அழைக்கச் சொன்னால் அதுவே கட்டாயப்படுத்துவது என்று பதில் அளித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை விரும்பாத எம்ஜிஆர்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கூற வந்த அதிகாரிகளி டம் நான் அண்ணாவிடம் தமிழ் கற்றுக் கொண்டவன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை கொள்கையாக கொண்ட நான் எப்படி ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவேன் என்று எம்ஜிஆர் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மனிதர்களிடம் மட்டுமல்ல அனைவரும் மீதும் இரக்கம் கொண்டவர்.
திருச்சியில் பயணித்த போது கொளுத்தும் வெயிலில் குதிரை வண்டியில் மனிதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால் குதிரையோ வெயிலில் நின்று கொண்டிருந்தது.
இதை கவனித்த என்.எஸ்.கிருஷ்ணன் குதிரை இளைப்பாறுவதற்காக நிழற்குடை கட்டிக் கொடுத்தார். இதுபோன்ற செயலை எந்த நடிகரும் செய்யவில்லை என்பது வரலாறு.
பெண்களுக்கான பள்ளி
சென்னை திருவல்லிக்கேணி யில் 1905ஆம் ஆண்டு ஸ்ரீ பார்த்த சாரதி சாமி இந்து பெண்கள் பாடசாலை இருந்துள்ளது.
இதில் 80 பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள் என்பது முக்கியமான செய்தி.
1925இல் தங்கத்தின் மதிப்பு
கெய்ரோவில் இருந்து அரேபியர்கள் கம்பளி கோட் அணிந்து அதில் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு வருகிறார்கள். சோதனையில் ஆறு தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படு கிறது.அப்போதே அதன் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஒரு பவுன் விலை ரூபாய் 70. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்து வி்ற்கும் தங்கத்திற்கான விலை ரூபாய் 125.ஆகவே தான் அந்தக் காலத்தில் இருந்து தங்கம் கடத்தல் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நிவாரண முகாம்
வாரண முகாம்
கி.பி 1283ல் நிவாரண முகாம்கள் இருந்துள்ளது.
கடும் மழை, வெள்ளம், வறட்சி போன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் “அஞ்சினான் புகலிடம்” என்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தங்கியவர்களிடம் வரி சலுகை வழங்கியதாக கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், சுசீந்திரம் கோவில்களில் இது போன்ற வரலாற்றுச் செய்தி கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா கால நீதிமன்றம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள காளிப் பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்பவர்கள், திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள், பொதுஇடங்களில் அநாகரிகமாக நடப்பவர்களை திருவிழாக்கான நீதிமன்றத்தில் நிறுத்திவிசாரித்து உடனடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததாகவரலாறு தெரிவிக்கிறது.
இலக்கியம் அரசியல் சமூகம்சார்ந்த செய்திகளை வழங்கியுள் ளார் நூலாசிரியர் வாசிக்க இனிமையாகும் புதுமையாகவும் உள்ளது.
நூல் : “திண்ணை சினிமா”
நூலாசிரியர்: ப. திருமலை
விலை : ரூபாய் 130
வெளியீடு: கோரல் பப்ளிசர்ஸ் ஆவடி, சென்னை-600055
தொடர்பு எண்:9043050666