சென்னை, மார்ச் 7- சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், ‘மகளிருக்கு அதிகார மளித்தல்-சவால்களும், வாய்ப்பு களும்’ என்பது பற்றிய கருத்தரங்க மும்,கலந்துரையாடலையும் நடத்தி யது. திருப்பெரும்புதூரில் உள்ள இளைஞர் மேம்பாட்டுக்கான ராஜீவ் காந்தி தேசிய நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜி பி.சி.தேன்மொழி, பத்திரிகை யாளர் கவிதா முரளிதரன், எழுத்தாள ரும், வரலாற்று ஆய்வாளருமான நிவேதிதா லூயிஸ், நடனக் கலைஞர் ஜிதேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர். தனக்கு என்ன வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திருமதி தேன்மொழி, தேர்ந்தெடுத்த பின் செயல்படுத்தும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்றார். குறிப்பிட்ட கல்விக்கும், பணிக்கும் பெண்கள் பொருத்தமானவர்கள் இல்லை என்று முன்முடிவுடன் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார். பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், பெண்கள் நலனுக்காக இயற்றப்பட்டு ள்ள சட்டங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிவேதிதா லூயிஸ்
நிவேதிதா லூயிஸ் பேசுகையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி அன்னா மாணி என்பதை நினைவுகூர்ந்தார். அந்தத் துறை முன்னேற்றம் அடைய அயராது பாடுபட்டதோடு சில கருவிகளையும், உபகரணங்களையும் உருவாக்கி னார் என்றும் குறிப்பிட்ட அவர், மேக் இன் இண்டியா என்பதை அன்னா மாணி, அப்போதே செயல்படுத்தத் தொடங்கி விட்டார் என்றும் கூறினார். இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய இ வி.கே.ஜானகி அம்மாள், அந்தத் துறையில் சிறப்பான ஆராய்ச்சி செய்தவர் என்றும், ஒரு மலருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு இருப்பதே இதற்கு சான்று என்றும் அவவர் தெரிவித்தார்.
கவிதா முரளிதரன்
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பேசுகையில், சமுதா யத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இப்போதும் பெண் சிசுக்கொலை நடந்திருப்ப தாக செய்திகள் வந்திருப்பதை சுட்டிக் காடிட்டி வருத்தம் தெரிவித்தார். பெண்கள் நலன் காக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், பெண்கள் பற்றிய பார்வையில், மன நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பனியில் வீசப்பட்ட பெண்குழந்தை
திரைக் கலைஞர் ஜிதேந்தர் தமது வாழ்க்கையின் நேரடி அனு பவத்தைப் பகிர்ந்து கொண்டார். சிம்லாவில் தாம் பணியாற்றிய போது, தம்மோடு பணியாற்றிய சக ஊழியருக்கு மூன்றாவதாகவும், பெண்குழந்தை பிறந்தது, அதனால் அவரை ஒதுக்கி வைத்ததோடு, அந்தக் குழந்தையையும் உறவினர்கள் வீட்டுக்கு வெளியே பனியில் போட்டுவிட்டனர். ஓர் இரவு கழிந்த நிலையிலும் குழந்தை உயிருடன் இருப்பதைப் பார்த்த அந்தப் பெண் போராடும் உணர்வைப் பெற்றதாகவும், அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி, மருத்துவம் படிக்கவைத்து முன்னேற்றி இருப்பதாகவும் கூறி னார். இத்தகைய சம்பவங்கள் போரா டும் உணர்வை தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்தில் இருந்து மாற்றம்
இந்தக் கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய சென்னை பத்திரிகை அலுவலக இயக்குநர் பி.குருபாபு, மாற்றம் என்பது குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றார். குடும்பத்தில் உள்ள பெண்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால்தான் சமூகத்திலும் சுதந்திரம் கிடைக்கும் என்றார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்பது போன்ற மகளிர் நலத் திட்டங்கள் பலவற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருவதைப் பற்றி அவர் விவரித்தார். வரவேற்புரையாற்றிய இளைஞர் மேம்பாட்டுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சிப்நாத் தேப்,சென்னை தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு இயக்குநர் எம் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்த ரங்க நிகழ்வை சென்னை பத்திரிகை தகவல் அலுவலக ஊடகம், தகவல் அலுவலர் வி கீதா ஒருங்கிணைத்தார். மாணவர்களுடனான கலந்தாய்வை பாலின கல்வித் துறை தலைவர் டாக்டர் கோபிநாத் ஒருங்கிணைத் தார்.