tamilnadu

img

கல்வி நிலையங்களில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் புகார்களை அளிக்க புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் என்று என தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளில் புகார்களை அளிக்க புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும்; மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளி ஆட்கள் பணிகளுக்காக வந்தால், அவர்களுடன் கல்லூரியைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும்; கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்திட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.