சென்னை,பிப்.12- தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று (பிப்.12) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர், பிப். 13 முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடை பெறும் என்றார்.
முதல்வர் பதிலுரை
ஆளுநர் உரை மீதான விவாதத் திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15 பதில் அளித்து பேசுகிறார். வருகிற 19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம் பிப். 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.