சென்னை, டிச. 2 - வங்கக் கடலில் உருவான பெஞ் சால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப் புரம், திண்டிவனம், செஞ்சி, மரக் காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல் வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் விழுந்தன. கடலூர் மாவட்டம் வெள்ளக்காடானது. பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயல் - வெள் ளம் பாதித்த பகுதிகளை திங்க ளன்று (டிச.2) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற் பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதி களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல்வர், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளை ஆய்வுசெய்தார்.
விரைவில் கணக்கெடுப்பு
காணை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்ற முதல்வர், அங்கு விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மழை முழுமையாக நின்ற பிறகு, வீடுகள் மற்றும் விளை நிலங்கள் பாதிப்பு குறித்து உரிய முறையில் கணக்கெடு ப்பு நடத்தப்படும்; பாதிப்புகளை நேரில் பார்வையிட குழுவை அனுப்பி வைக்குமாறு ஒன்றிய அர சுக்கும் கோரிக்கை விடப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.
மின்சாரம் சீரமைப்பு
புயல் மழையால் பாதிக்கப் பட்ட விழுப்புரம் மாவட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர், “விழுப் புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரம் இன்றி பல பகுதி கள், பல கிராமங்கள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் சரி செய்வதற்கான 900 நபர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக மின்சாரம் தர முடியாத சூழ்நிலை இருக்கிறது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் எல்லாம் உட னுக்குடன் மின் இணைப்பு வழங்கப் பட்டு வருகிறது” என்று கூறினார்.
1.29 ஆயிரம் ஹெக்டேர் பாதிப்பு
மேலும், “தற்போது மழையின் அளவு கடலோர மாவட்டங்களில் குறைந்திருந்தாலும், உள் மாவட்டங் ளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த ஒரு சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயிர் சேதங் களைப் பொறுத்தவரையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங் களில் நெற்பயிர் மூழ்கியிருக்கிறது.
நிச்சயம் நிவாரணம்
தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதும் நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்த பின், முறையான, முழுமை யான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும். அதேபோல், இந்தப் புயலின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, சேதமடைந்த வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றும் கூறினார்.
ஒன்றிய அரசு உதவுமா?
தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கே உரிய நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்கவில்லை. தற்போது மட்டும் தரு வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “நம்பிக்கையோடுதான் அனுப்பு கிறோம். அதையும் எப்படி சமாளிப்பது என்பதை பிறகு நாங்கள் முடிவு செய்கிறோம்” என்றார்.
இருளர், மீனவ மக்களுடன் சந்திப்பு
முன்னதாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக விழுப்புரத்திற்கு சென்ற முதலமைச்சர், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள தேவனேரியில் உள்ள இருளர் மக்களை சந்திந்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மீனவர்கள் தேவனேரி பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் மற்றும் இரு ளர் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக் கைகளுடன் மனுக்களை வழங்கினர்.
பின்னர், அங்கிருந்து கல்பாக்கம் பகுதிக்கு சென்ற முதல்வர் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் உள்ள கடப்பாக்கம் அடுத்த சேமிலிபுரம் பகுதியில் சேத மடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார்.
இந்த ஆய்வின் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இயற்கைச் சீற்ற பாதிப்புகளை விரைவில் சரி செய்வோம்!
விழுப்புரம் மாவட்டத்தில் மழை- வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “பெஞ்சால் புயல் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங் களுக்கு அமைச்சர்களை பொறுப்பாக நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் தொடர்ந்து பேசி, கள நிலவரத்தை கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.