சென்னை, ஜூன் 16- சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுப வர்களை விருதுகள் தாமாகவே தேடிவரும் என்று விஐடி வேந்தர் விசுவநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரி வித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் விசுவ நாதனுக்கு பாராட்டு விழா சென்னை யில் உள்ள திறந்தநிலை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் தலைமை உரையாற்றி னார். விழாவில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி படித்தேன். அதில் கூறியிருப்பதாவது:- விசுவநாதனுக்கு கவுரவ முனை வர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன். அவர் சிறந்த கல்வியாளர் மட்டு மின்றி, தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழகத்தின் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
கல்வித்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் நம்மை வியக்க வைத்தவை. சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்று வேரை விருதுகள் தானாக தேடி வரும். அதேபோல் எண்ணற்ற விருது களை அவர் பெற்றுள்ளார். இந்தியாவின் உயர்கல்வி வாய்ப்புகள் அனைத்து தரப்பின ருக்கும் கொண்டு சென்று அவர் நிகழ்த்தி வரும் அரும்பணிகள் இந்த அங்கீகாரம் அவரை தேடி வந்துள்ளது.
இந்த அங்கீகாரத்தை மேலும் ஊக்கம் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சமூகத் தொண்டையும், கல்வித் தொண்டையும் தொடர்ந்து ஆற்றி, மென்மேலும் புகழுடன் வாழ உளமார வாழ்த்துகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘தமிழகத்தில் அரசி யல் அதிகாரத்தில் இருந்தவர்கள் சொற்பமானவர்களே தான் கல்விக்காக நீங்கள் ஈடுபடுத்தி கொண்ட வர்கள்.
அந்த வகையில் கல்விக்காக தன்னை அரசியல் வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டவர் விசுவநாதன். அவருடைய இலக்கு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மட்டும். அவரது ஸ்டார் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மாண வர்களுக்கு இலவச கல்வியை தந்து வருகிறார். அவர் நூற்றாண்டு கடந்து வாழ வேண்டும்’’ என்றார்.