tamilnadu

img

காவி நிறத்தில் தூர்தர்ஷன் லோகோ

சென்னை,ஏப்.21- காவி நிறத்தில் தூர்தர் ஷன் லோகோ மாற்றப்பட்ட தற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலை தளத் தில் பதிவிட்டிருப்பதாவது; உலகப் பொதுமறை தந்த  வள்ளுவருக்குக் காவிச்சா யம் பூசினார்கள்; தமிழ்நா ட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப் படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமய மாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக் கறையை அடித்திருக் கிறார்கள்!

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவி மயமாக்கும் பாஜக சதித் திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

இவ்வாறு அதில்  பதி விட்டுள்ளார்.