tamilnadu

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,திருவள்ளூர் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்.163/2019

 திருவள்ளூர் மாவட்டத்தில், பூச்சியத்திப்பேடு புதிய எண்.248, பஜார் தெரு என்ற முகவரியில் உள்ள புனீத் மெடிக்கல்ஸ் என்ற சில்லறை மருந்துகள் விற்பனைக் கடையின் மீது திரு.பி.என்.கோவிந்தராகவன் என்ற நபர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மருந்துகள் கட்டுப்பட்டு இணை இயக்குநர் அலுவலகம், திருவள்ளூரில் இருந்து 21.12.2016 அன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 27.06.2018 அன்று செங்குன்றம் சரக மருந்துகள் ஆய்வாளர் திருமதி எம்.பவானி என்பவர் மேற்படி புனீத் மெடிக்கல்ஸ் மருந்துக்கடை யில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது, மேற்படி மருந்துக்கடையின் உரிமையாளரான திரு. மதுசூதனராவ் கடையில் இருந்ததாகவும், ஆனால் அந்த கடையின் பதிவு பெற்ற மருந்தாளுநரான திருமதி ஜே.புஷ்பலதா என்பவர் கடையில் ஆய்வின்போது இல்லை என்றும், மேற்படி ஆய்வின்போது, மேற்படி மருந்துக்கடையில் பதிவு பெற்ற மருந்தாளுநரின் மேற்பார்வையின்றி 5 வகையான மருந்துகளை வெவ்வேறு தேதிகளில் விற்றிருந்தது தெரியவந்ததாகவும், மேலும் மருந்துச் சீட்டுப் பதிவேட்டினை ஆய்வு செய்தபோது, மருந்துச்சீட்டுப் பதிவேட்டில் சப்ளை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்கள் பில் எண்.2866 நாள் – 02.05.2018 முதல் பில் எண்.29176 நாள் – 24.06.2018 வரையில் மருந்தாளுநரின் கையொப்பத்துடன் எழுதப்பட வில்லை என்றும், மேலும் பில் எண்.291177 தேதி – 24.06.2018 முதல் பில் எண்.29190 நாள் -26.06.2018 வரையான பில்களை மருந்துச் சீட்டுப்பதிவேட்டில் பதிவு செய்யவில்லை என்றும் கண்டறியப்பட்டதாகவும், மேலும் மேற்படி மருந்துக்கடையில் கொள்முதல் ரசீதுகள் மற்றும் மருந்துஅளின் கையிருப்பு விவரங்கள் ஆகியவற்றை சரிபார்த்தபோது, 4 வகையான ஷெட்யூல் H மருந்துகளை முறையான விற்பனை ரசீது இல்லாமல் விற்பனை செய்திருந்ததாகவும், அதற்கான விற்பனை ரசீதுகளை பராமரிக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டதாகவும், ஆகவே, மேற்படி முரண்பாடுகள் குறித்து, புனீத் மெடிக்கல்ஸ் மருந்துக் கடையின் உரிமையாளரான திரு.மதுசூதனராவ் என்பவருக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லாத காரணத்தினால் மேற்படி திரு. மதுசூதனராவ் என்பவரை எதிரியாக சேர்த்து, மேற்படி எதிரி மருந்துகள் மற்றும் அழகுச்சாதனச் சட்டம் பிரிவு 18(C) உடன் இணைந்த 65(2) உ/இ பிரிவு 27(d) மருந்துகள் மற்றும் அழகுச் சாதனச் சட்டம் பிரிவு 18(C) உடன் இணைந்த 65(3)(1) உ/இ பிரிவு 27(d) மற்றும் மருந்துகள் மற்றும் அழகுச்சாதனச் சட்டம் பிரிவு 18(C) உடன் இணைந்த விதி 65(4)(3)(i) உ/இ பிரிவு 27(d)ன்படி குற்றம் செய்திருப்பதாக குறிப்பிட்டு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இந்நீதிமன்றத்தால் மேற்படி வழக்கு விசாரிக்கப்பட்டதில், மேற்படி எதிரி இந்நீதிமன்றம் ஆஜராகி, மேற்படி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டு குற்ற ஒப்புதல் மனு தாக்கல் செய்தார், குற்ற ஒப்புதல் மனு அனுமதிக்கப்பட்டு, வழக்காவணங்களின் படி, எதிரியை குற்றவாளி என்று இந்நீதிமன்றம் தீர்மானித்து, எதிரிக்கு மேற்படி மூன்று பிரிவுகளின் கீழான குற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் இந்நீதிமன்றம் கலையும் வரை சிறைத்தண்டனை விதித்தும், மேலும் தலா ரூ.20000/- அபராதமும் க/த தல 1 மாதம் மெய்க்காவல் சிறைத்தண்டனை விதித்தும், இந்நீதிமன்றத்தில் 30.05.2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மொத்த அபராதத் தொகையான ரூ.75000/- எதிரியிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.
ஓம்./ TV மணி
தலைமை நீதித்துறை நடுவர்,
திருவள்ளூர்
உண்மை நகல்
சிரஸ்ததார்