சென்னை, பிப். 23- நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் வாக்களித்தப் பின்னர் விவி பேட் ஒப்புகைச் சீட்டு வழங்கும் சாத னம் கடைசியில் வைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலி யுறுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளைத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மேற்கொண்டு வரு கிறார்.
மக்களவைத் தேர்தல் நடை பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வியாழனன்று (பிப்.22) இரவு சென்னைக்கு வந்தார். அவருடன் தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணைத் தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பாது, மனோஜ் குமார் சாகு, முதன்மைச் செயலாளர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோர் வந்தனர்.
பிப்.23 வெள்ளியன்று காலை 11.30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, தேமுதிக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி பிரதி நிதிகளிடமிருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்க ளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெற்றுக் கொண்டார்.
சட்டத்திற்கு புறம்பான ஏற்பாடு பின்னர் திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தி யாளர்களிடம் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும், மைய கட்டுப்பாடு யூனிட்டுக்கும் இடையில் விவிபேட் வைக்க வேண்டும் என்ற புதிய நிலை கொண்டு வந்துள்ளனர்.
இது சட்டத் திற்கு புறம்பானது. இடையில் விவி பேட் வைத்தால் 100 விழுக்காடு துல்லியமாக காட்டாது. அது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற வழிமுறையைக் கையாண்டால் தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள் ளது. தேர்தல் தொடர்பாக புகார் மனு அளித்தால், அதன் மீது உடனடி நட வடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளோம். எத்தனை கட்ட மாக தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.
“விவிபேட்” கடைசியில் இடம்பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கூறுகையில், “ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். பல கட்டங்களாக நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம். மின் னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படு கிறது.
இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுவாக உள்ளது. வாக்குச்சாவடியில் வைக்கப்பட வுள்ள மூன்று சாதனங்களின் வரிசைப்படி வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்து வார்கள். அது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான பிறகு கன்ட்ரோல் யூனிட் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு சாத னத்தில் பதிவுசெய்யப்பட்டு பின்னர் விவிபேட்டிற்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி யிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட தரவுகளுடன் விவிபேட் சாதனத்தில் இருந்து வரும் ஒப்புகைச் சீட்டு 100 விழுக்காடு சரியாக இருக்கவேண்டும். தேசிய அளவில் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நாங்கள் வைத்திருந்தோம். இங்கும் கோரிக்கையை மீண்டும் வலி யுறுத்தியுள்ளோம். வாக்களித்த அனைவருக்கும் 100 விழுக்காடு விவிபேட் ரசீதுகள் வழங்கப்படவேண்டும்.
இரண்டாவதாக வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை பதிவுசெய்யும் சாதனம், கட்டுப்பாட்டு சாதனம் பின்னர், இந்த வேட்பாளருக்கு தான் வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய விவிபேட் ரசீதை வழங்கக்கூடிய சாதனம் என்ற வரிசையில் இருக்க வேண்டும் என்று சிபிஎம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். நடுநிலையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வேண்டும். மதுரையில் நடைபெற்றதைப் போல தவறுகள் நடைபெறக் கூடாது எனவும் அதிகாரியிடம் வலியுறுத்தியதாக தெரி வித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகை யில், “தேர்தல் ஜனநாயக முறையில், நியாயமான தேர்தலாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் முரண்பாடு களை சரி செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி களை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். சுதந்திரமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினோம்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சந்திரமோகன், “தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்.
நீண்ட நாட்கள் இடை வெளி விட்டு நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் எழும். எனவே அதை தவிர்க்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். வாக்களிக்க வரக்கூடிய மக்களுக்கு போதுமான வசதிகள் வாக்குச்சாவடி மையத்தில் இருக்க வேண்டும். அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.