சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று தேசிய நில நடுக்கவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள லாயிட்ஸ் ரோட்டில் சில கட்டிங்களில் இன்று காலை 10.15 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் இந்த அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மெட்ரோ பணிகளால் இந்த அதிர்வுகள் ஏற்படவில்லை என்று மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று தேசிய நில நடுக்கவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக குறுகிய இடத்திற்குள் நில அதிர்வு ஏற்படாது, ஒருவேளை குறுகிய இடத்தில் நில அதிர்வு உணரப்பட்டால் வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் ஒன்றிய அரசின் தேசிய மையம் விளக்கமளித்துள்ளது.