tamilnadu

img

சென்னை:விஷவாயு தாக்கி 3 பேர் பலி

சென்னையில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷவாயு தாக்கி பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை துரைபாக்கம் அருகே உள்ள கல்லுக்குட்டை பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில்  3 பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;