சென்னை, டிச.18- மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் , மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகள் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திங்களன்று (டிச.16) சமர்ப்பித்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது, வெப்ப தணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்துதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை முன்மொழிகிறது. தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை (DCS) முன்னெடுப்புக்கென மாநில திட்ட அறிக்கை குறுகிய, நடுத்தர நீண்டகால உத்தி களுடன், அரசு துறைகளில் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.