சென்னை,டிச.24- சென்னையில் தடையை மீறி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் தோழமைக் கட்சி களின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் திங்க ளன்று(டிச.24) சென்னை எழும்பூரில் பேரணி நடத்தப்பட்டது. தடையை மீறி இந்த பேரணி நடத்தப்பட்டதாக மு.க.ஸ்டா லின், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக கூடுவது, தடையை மீறி போராட்டம், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பேரணிக்கு நிபந்தனையோடு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் எனவும் எழும்பூர் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.