tamilnadu

img

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

இந்தாண்டும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டப்பேரவை யில், துறை வாரியாக மானி யக் கோரிக்கைகள் மீது விவா தம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பதில ளித்துப் பேசிய அமைச்சர்கள்  புதிய அறிவிப்புகளை வெளி யிட்டனர். அதன் விவரம் வருமாறு:

க.பொன்முடி

அச்சுத் தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்  றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்க ளில் புதிதாக வளர்ந்து வரும்  தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப 6 புதிய பட்டயப் படிப்  புகள் அறிமுகப்படுத்தப்படும்.

கோவையில் உள்ள அரசு  தொழில்நுட்பக் கல்லூரியில்  300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக்  கட்டடம் ரூ. 21 கோடியில் கட்  டப்படும். ஈரோட்டில் உள்ள  அரசு பொறியியல் கல்லூரி யில் 200 பேர் தங்கும் வகை யில் கூடுதல் ஆண்கள் விடு திக் கட்டடம் ரூ. 14 கோடியில்  கட்டப்படும்.

2023-24ஆம் கல்வியாண் டில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி  பெற்று கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் அதிக மான மாணவர்கள் விண்ணப்  பித்தனர். அதிக மதிப்பெண் கள் பெற்றிருந்தும் பல மாண வர்களால் கல்லூரிகளில் சேர  முடியவில்லை. இந்த மாண வர்கள் வேறு கல்லூரிகளி லும் சேரவும் வாய்ப்பில்லை. இதனை கருத்தில் கொண்டு, கலை மற்றும் அறிவியல் கல்  லூரிகளில் 2024-25 ஆம் கல்வி  ஆண்டு முதல் அரசு கல்லூரி களில் 20 விழுக்காடும், அரசு  உதவி பெறும் கல்லூரிகளில் 15 விழுக்காடும், தனியார் கல்  லூரிகளில் 10 விழுக்காடு மாணவர் சேர்க்கை அதிகரிக்  கப்படும்.

ஜெகநாதன் பதவி நீட்டிப்பை தடுப்போம்!

முன்னதாக, சேலம் பெரி யார் பல்கலைக்கழக விவகா ரம் குறித்து நாகை எம்எல்ஏ  ஆளூர் ஷாநவாஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் முறைகேடுகளில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகநாதனுடன் தமிழ்நாடு ஆளுநர் எவ்வளவு நட்புடன்  இருக்கிறார் என்பது அனை வருக்கும் தெரியும். அவர்  மீண்டும் துணைவேந்தராக வருவதற்கான முயற்சிகளி லும் ஈடுபடுவதாக தகவல்கள்  வருகின்றன. அதை தடுத்து  நிறுத்தும் செயலில் தமிழ்நாடு  அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

3 நிரந்தர பேரிடர் மீட்பு நிவாரண மையங்கள்!

வருவாய் மற்றும் பேரி டர் மேலாண் மைத் துறை (கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்) வெளியிட்ட புதியஅறிவிப் புகள் வருமாறு:

சொந்த அலுவலகக் கட்ட டங்கள் இல்லாத, பழுதடைந்த  நிலையில் உள்ள 33 வரு வாய்த்துறை அலுவலகக் கட்ட டங்கள், அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள் ரூ. 41.25 கோடி மதிப்பீட்டில் புதிய தாக கட்டப்படும்.

புயல், அதி கனமழை, வெள்  ளப்பெருக்கு போன்ற பேரிடர களால் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்  றும் நிவாரண மையங்கள் ரூ. 36  கோடி மதிப்பீட்டில் அமைக்கப் படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்களைப் பாது காப்பாக தங்க வைக்க ரூ. 17.50  கோடி மதிப்பீட்டில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப் படும்.

பேரிடர்களின் போது பொது மக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பய ணிகளைப் பாதுகாக்க, அபாய  எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒலி  எழுப்பும் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் ரூ. 13.25 கோடி மதிப்  பீட்டில் நிறுவப்படும்.

பேரிடர் கால மீட்பு நடவடிக்கை களுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் ரூ.105.36 கோடி மதிப்பீட்டில் வாங்  கப்படும்.

வருவாய் நிலை ஆணை 21-ன்  கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப் படும் வீட்டுமனை ஒப்படை ஆணை  கள் இணைய வழியில் வழங்கப் படும்.

பதிவுத்துறையில் வழங்கப் படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று  ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில்  நடந்த பட்டா மாற்ற விவரங்களை  அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்  தப்படும்.

கல்லூரிகளில் சட்டத் தமிழ்  புதிய பாடத்திட்டம்!

சட்டத்துறை அமைச்சர் எஸ்.  ரகுபதி வெளியிட்ட புதிய அறிவிப்பு கள் வருமாறு:

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் மாவட்ட உரிமையியல் மற்  றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்  நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம், திரு மயத்தில் தற்போது இயங்கி வரும்  மாவட்ட உரிமையியல், குற்றவியல்  நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிரித்து தனித்தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றமும் அமைக்கப்படும்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்  துக்குடி, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களுக்கான போதை  மருந்துகள், மன மயக்க பொருட்கள்  சட்டம், 1985ன் கீழ்பதிவு செய்யப்  படும் வழக்குகளை விசாரிப்பதற் கென திருநெல்வேலியில் ஒரு  சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

மதுரை மாவட்டம் மதுரையில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம்  அமைக்கப்படும். திருச்சியில் மாநில சீர்திருத்த நிருவாகப் பயிற்சி  நிறுவனம் அமைக்கப்படும். தஞ்சா வூர் மாவட்டத்தில் புதியதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும்.

சிறைவாசிகள் தங்கள் குழந் தைகளை அருகில் சந்திக்க ஏது வாக குழந்தை நேய நேர்காணல் அறைகள் 9 மத்தியச் சிறைகள், 9  பெண்கள் தனிச் சிறைகளில் அமைக்கப்படும்.

அரசு சட்டக் கல்லூரிகளில்  சட்டத்தமிழ் எனும் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதி தாக இரண்டு முதுகலை சட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலை  பேசி வசதி அறிமுகம் செய்யப்படும்.