சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் குமரவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.