tamilnadu

img

முகக்கவசம் அணியாவிட்டால் சென்னையில் ரூ.500 அபராதம்


-
சென்னையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்க ளுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசும் காவல்துறையும் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. 
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தேவையில்லா மல் வெளியில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் தடையை மீறி சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. 

காவல்துறை மற்றும் அரசின் உத்தரவுகளை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தும் எச்சரித்தும் வருகின்றனர். ஆனாலும் அரசு உத்தரவை மீறும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறை மட்டுமன்றி அரசு அதிகாரிகளையும் கவலைகளை செய்திருக்கிறது.

இந்நிலையில், முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 179 -ன் கீழ் வழக்கு செய்யப்படும் என்றும் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.