tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்

அம்பத்தூர், மே 16-முகப்பேர் மேற்கு 4ஆவது பிளாக்கில் வசிப்பவர் ஏ.செல்வராஜ். இவர் அம்பத்தூர் தெற்கு ஆட்டோ சங்க செயலாளராக உள்ளார். இவரது மகன் கார்த்திக் (21). கார்த்திக் உடல்நலக் குறைவால் வியாழனன்று (மே 16) காலமானார்.அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ சங்க வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயகோபால், பகுதி துணைத் தலைவர் சேட்டு, தெற்கு பகுதி தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் குப்புசாமி, சு.லெனின்சுந்தர், மணிமேகலை, பி.என்.உண்ணி, பி.ஜி.கே.ரமேஷ், கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.வியாழனன்று (மே 16)மாலை அவரது உடல்அம்பத்தூர் டன்லப் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.  


கஞ்சா விற்ற 5 பேர் கைது

சென்னை, மே 16-புளியந்தோப்பு கன்னிகாபுரம் காஸ்நகர் 4வது தெருவில் ஒரு வீட்டில் கஞ்சாவிற்கப்படுவதாக புளியந்தோப்பு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் எம்.ரவி தலைமையில் காவலர்கள் அந்த வீட்டில் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.சோதனையில், அந்தவீட்டில் இருந்த 3 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த வீட்டில் வசிக்கும் வே.ஜோதி (35), ச.கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மீஞ்சூரில் ஒரு கும்பலிடம் இருந்து வாங்கி வருவதுதெரியவந்தது. அங்கு ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து 51 கிலோகஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக அங்கிருந்த கோயம்புத்தூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (24), மீஞ்சூர் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பா.பாலமுருகன் (23), காசிமேட்டைச் சேர்ந்த இளங்கோ (33) ஆகிய 3 பேரை கைது செய்து.