tamilnadu

img

சென்னை,வடசென்னை,காஞ்சிபுரம்,கும்மிடிப்பூண்டியில் மற்றும் திருவள்ளூர் வேட்பாளர் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழும்பூர் பகுதிக்குழு சார்பில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் வாழும் பகுதியில் பகுதிச் செயலாளர் கே.முருகன் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவை வேட்பாளர் டாக்டர் வீ.கலாநிதியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் 48வது வட்டத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பாப்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் கே.செல்வானந்தன், கோ.தினேஷ்குமார், எம்.அண்ணாமலை, டி.வெங்கட், இளையஅருணா(திமுக) உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.


மதச்சார்பற் முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் க.செல்வத்திற்கு ஆதரவாக காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் எ.வாசுதேவன், நகரக்குழு உறுப்பினர் கே.சங்கர், கிளைச் செயலாளர் அரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.துளசிநாராயணன், சி.ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் ரமேஷ், அருள் காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து தெரு, தெருவாக வாக்கு கேட்டனர்.


திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு கவரைப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சூரியபிகாஷ், எம்.சி.சீனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;