செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியம், பாக்கம், சிலாவட்டம் ஊராட்சிகளில் 100நாள் வேலை வழங்க கோரி சிபிஎம் மதுராந்தகம் வட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் டி. கிருஷ்ணராஜ் மாவட்ட குழு உறுப்பினர் நீ.மாசிலாமணி உள்ளிட்ட பலர் பேசினார். பேச்சுவார்த்தையில் அடுத்த வாரம் பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.