சாலை விபத்தில் இருவர் பலி
செங்கல்பட்டு, ஆக.27- காஞ்சிபுரம் மாவட்டம், பனையூர் அடுத்த விளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜபருல்லா(40). இவரது நண்பர் முசாதிக் (34). இவர்கள் இருவரும் திங்களன்று (ஆக.26) இரவு மோட்டார் சைக்கிளில் பரமங்கேணி நோக்கி, ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, புதுச்சேரி யில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கூவத்தூர் காவலர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில்லறை கடைக்காரர்கள் மீது பொய்வழக்கு போடும் அதிகாரிகள் முதல்வர் தலையிட கோரிக்கை
சென்னை,ஆக.27 சில்லறை கடைகாரர்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய சில்லறை விற்பனை யாளர் சங்கத்தின் சம்மேளனம் (எஃப்ஆர்ஏஐ) கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சம்மேளனத்தில் இணைந்து செயல்படும் சென்னை புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செல்லதுரை கூறுகையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை நாங்கள் விளம்பரப்படுத்தி விற்பதாக பொய்யான புகாரின் பேரில் கைது செய்வது, பொருட்களை பறிமுதல் செய்வது வழக்குபோடுவது மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சில்லறை கடைகளை நம்பி தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும் இந்த பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலை யிட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின பேரவைத்தலை வர் தா.வெள்ளையன், மத்திய சென்னை மாவட்டத்தலைவர் தேவராஜன் உள்பட பலர் பேசினர்.
6 வழிசாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு
திருவள்ளூர், ஆக. 27- திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் - சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கிலோ மீட்டர் வரை 6 வழிச்சாலை அமைப்பதற்காக ஊத்துக்கோட்டை வட்டம் செங்கரணி, மேட்டு கண்டிகை, பால கண்டிகை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் விளை நிலங்கள் கையகப்படு த்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் செங்கரணி, மேட்டு கண்டிகை, பால கண்டிகை ஆகிய பகுதிகளில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட னர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். எண்ணூர், காட்டுப்பள்ளி காளாஞ்சி யில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கனரக சரக்கு வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்காக முப்போகம் விளையும் விளைநிலங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆயிரக்கணக்கான மரங்கள் குடி யிருப்பு பகுதிகள் ஆகியவற்றை அழித்து இத்திட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் கூறினர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியோடு நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.