tamilnadu

img

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம்

செங்கல்பட்டு, பிப். 5- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பயன் தரும் வகையில் விரைவில் மலிவு  விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத் தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பர சன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் திங்களன்று (பிப். 5) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு  செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போது இந்த பேருந்து முனையத்தை தின சரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த பேருந்து முனையத்தை முழு மையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்தும் அளவிற்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் இங்கு  புதிய காவல் நிலையம் அமைக்கும்  கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த முனை யத்தில் வெளியூர் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் பேருந்து கள் நிற்கும் இடத்திற்கும் இடையில்  பயணிகள் சுலபமாக செல்வ தற்காக சாய்வு தளம் மற்றும் படிக் கட்டுகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிளாம் பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்  அமைப்பதற்காக ரூ.20 கோடி  ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு,  6 மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் இந்த முனையத்தின் எதிர்புறம் உள்ள ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் ஜனவரி 31 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி யாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு  விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார். இந்த பேருந்து முனையத்தி லிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள  முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில்  ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120  ஆம்னி பேருந்துகள் நிறுத்து வதற்கு ஏதுவாக கட்டுமானப் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது.

இந்த இடத்தில் 300 பணியாளர் களுக்கான தங்குமிட வசதி, குடிநீர்  வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக மகிழ்ச்சி யோடு பயன்படுத்தும் அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வரு கிறது.

மேலும் பயணிகளின் தேவை களை பூர்த்தி செய்யும் வகையில்  இந்த பேருந்து முனையத்தில் தர மான மற்றும் சுகாதாரமான முறை யில் மலிவு விலை உணவகங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். ஏடிஎம் மையங்களும் திறக்கப் படும். எதிர்காலத்தை கருத்தில்  கொண்டு அனைத்து வசதிகளுடன்  கூடிய இந்த பேருந்து முனையம்  இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றமே பாராட்டு தெரிவித்துள் ளது என்று அமைச்சர் தெரிவித் தார்.