சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு இலவசமாக வழங்க 'மகிழ்மதி' என்று இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளையும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் ரத யாத்திரையை அனுமதிப்பதில் நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் நலத்தின் மீது இல்லாதது வருத்தமாக இருக்கிறது என்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.